Tuesday, September 29, 2009

என் தமிழ்...

நிறம் மாறும் நிஜங்களும் நிழலாடும் பொய்களும் நிறைந்திருக்கும் பூமியில் ஏதோ ஓர் மனதின் மூலையில் தயங்கித்தடுமாறும் ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது
என் தமிழ்...

Monday, September 28, 2009

அவளுக்காகவே

பிரிந்துவிட்ட காதலின் வலி மாறாமல்
என்னுள் ரணமாய் இருக்க,
அர்த்தராத்திரியின் அர்த்தமற்ற மௌனங்களின் கேள்விகளுக்கு
விடைதேடி காத்திருக்கிறேன்.
வரமாட்டாள் என தெரிந்திருந்தும் அவளுக்காகவே....