Saturday, October 3, 2009

சாலையில் தெறித்த கடைசி இலை...



தூரத்தில் ஒருத்தி யாரென தெரியவில்லை.
மெல்ல நெருங்கினாள் பழக்கப்பட்ட முகம்.
வேகம் குறைந்த என் கால்கள் லேசாக
தடுமாறியது.

அருகில் வந்தவள் மெல்ல முகம் பார்த்தாள்.
ஏதோ சொல்ல வாயெடுத்தாள் - நானும் கூட..
வார்த்தைகள் வெளிவரத்தயங்கியது
இருவருக்கும்..

அர்த்தமுள்ள ஆழ்த்த மௌனம்,
அமைதியான சிலநொடி பார்வைகளுக்குப்பின்,
இறுக்கமான நடையுடன் கடந்து சென்றோம்..
தூரம் சென்றபின் திரும்பிப்பார்க்க
தோன்றியது..

அவளுக்கும் கூட தோன்றி இருக்கலாம்..
திரும்பிப்பார்த்தேன் நான் மட்டும்..
தூரத்தில் அவள் மறைத்திருந்தாள்.
பிரிந்துவிட்ட காதலி என்றாலும் கூட
அவளை பார்த்துவிட்ட மகிழ்ச்சி
மனதின் ஏதோ ஒரு மூலையில்..
ஏன் என விளங்காமல் நடந்தேன்..
இதே சாலையில் எங்களை ஒன்றாக பார்த்திருந்த
பட்டுப்போன மரத்தின் காய்ந்துபோன கடைசி
இலையொன்று சாலையில் விழுந்து தெறித்தது ..
எங்களை போலவும் எங்கள் காதலை போலவும்...

No comments:

Post a Comment